/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/வரைவு வாக்காளர் பட்டியல் கால நீடிப்பு கேட்டு கடிதம்வரைவு வாக்காளர் பட்டியல் கால நீடிப்பு கேட்டு கடிதம்
வரைவு வாக்காளர் பட்டியல் கால நீடிப்பு கேட்டு கடிதம்
வரைவு வாக்காளர் பட்டியல் கால நீடிப்பு கேட்டு கடிதம்
வரைவு வாக்காளர் பட்டியல் கால நீடிப்பு கேட்டு கடிதம்
ADDED : செப் 15, 2011 09:13 PM
திண்டுக்கல் : உள்ளாட்சி தேர்தலுக்கு போட்டோவுடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிக்க, கால நீடிப்பு கேட்டு, அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர்.
உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை விரைவில் முடிக்க, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதன்முறையாக, போட்டோவுடன் கூடிய வாக்காளர் பட்டியல் இத்தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகளை, இன்றுடன் முடிக்க அறிவுறுத்தப்பட்டது. பணிகள் முடியாத நிலையில், தேர்தல் கமிஷனிடம், கால நீடிப்பு கோரப்பட்டுள்ளது. ஊரக பகுதியின் வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியை, பி.டி.ஓ., க்களும், தேசிய தகவல் ஆணையமும் இணைந்து செய்வதால், தாமதம் ஏற்பட்டுள்ளது. நீடிப்பு கேட்டு, தேர்தல் கமிஷனருக்கு, பல மாவட்டங்களில் இருந்து கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதனால், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட, மேலும் சில நாட்கள் ஆகும்.


