Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/சமாதான கூட்டம்

சமாதான கூட்டம்

சமாதான கூட்டம்

சமாதான கூட்டம்

ADDED : செப் 15, 2011 03:38 AM


Google News
கள்ளக்குறிச்சி:தேர் திருவிழா தொடர்பாக சமாதானக்குழு கூட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சி அடுத்த பெருவங்கூர் காலனி முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா நாளை(16ம் தேதி) நடக்கிறது.

இதற்கான அழைப்பிதழில் அதே ஊரைச் சேர்ந்த காங்., மாவட்ட கவுன்சிலர் இளையராஜாவின் பெயர் விடுபட்டதால் பிரச்னை எழுந்தது. இது குறித்து சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருப்பதற்காக நேற்று கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் சமாதான குழு கூட்டம் நடந்தது.தாசில்தார் வைகுண்டவரதன் தலைமையில் நடந்த கூட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், வருவாய் ஆயவாளர் குமரன், வி.ஏ.ஓ., தேவராஜ் மற்றும் இளையராஜாவின் சகோதரர் பரசுராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us