ADDED : செப் 11, 2011 11:15 PM
திருப்பாச்சேத்தி : திருப்பாச்சேத்தியில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
திருப்பாச்சேத்தியில் மதுரை- ராமேஸ்வரம் மெயின்ரோட்டில் அதிகளவில் வாகனப்போக்குவரத்து உள்ளது. இருபுறமும் நடைபாதையை ஆக்கிரமித்து பூ, காய்கறி, பெட்டிக்கடைகள் வைக்கப்பட்டுள்ளது. கடைக்காரர்கள், ரோட்டை ஆக்கிரமித்து கடை வைத்துள்ளோரிடம் வாடகையும் வசூலிக்கப்படுகிறது. லோடு ஆட்டோக்களும் இருபுறமும் ஆக்கிரமித்து பயணிகளை ஏற்றுவதால் விபத்து ஏற்படுகிறது.ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முன்வரவேண்டும்.