/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/உலக விண்வெளி வார விழா பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள்உலக விண்வெளி வார விழா பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள்
உலக விண்வெளி வார விழா பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள்
உலக விண்வெளி வார விழா பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள்
உலக விண்வெளி வார விழா பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள்
ADDED : செப் 06, 2011 01:08 AM
திருநெல்வேலி : மகேந்திரகிரி திரவ இயக்க திட்ட மையம் சார்பில் வரும் அக்டோபர் மாதம் 4ம் தேதி முதல் 10ம் தேதி வரை உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படுகிறது.
இதில் தமிழகத்தை சேர்ந்த உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள் ளிகளை சேர்ந்தோர் பங்கேற்கலாம். 8,9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு விண்வெளி ஆய்வும் சமூக வளர்ச்சியும் என்ற தலைப்பிலும், 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மனித விண்வெளி பயணத்தின் 50 ஆண்டுகள் என்ற தலைப்பில் கட்டுரைகள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். கட்டுரைகள் தெளிவாகவும், திருத்தமாகவும் மாணவ, மாணவிகளின் கையெழுத்தில் ஏ4 அளவு தாளில் 2000 வார்த்தைகளுக்கு மிகாமலும், ஒவ்வொரு தாளிலும் ஒரு பக்கம் மட்டும் எழுதியிருக்க வேண்டும். போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளின் பெயர், வயது, வகுப்பு, பள்ளியின் பெயர், முவகரி, பெற்றோர் பெயர், வீட்டின் முவகரி, டெலிபோன் எண் ஆகியவற்றையும் குறிப்பிட வேண்டும். இந்த கட்டுரைகள் வரும் 25ம் தேதிக்கு முன்பாக 'த அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபீசர், எல்.பி.எஸ்.சி, மகேந்திரகிரி போஸ்ட், நெல்லை மாவட்டம் - 627 133' என்ற முகவரிக்கு உறையின் மேல் கட்டுரைப் போட்டி என குறிப்பிட வேண்டும். தமிழ், ஆங்கில கட்டுரைகளுக்கு தனித்தனியாக முதல் மற்றும் 2ம் பரிசுகள் வழங்கப்படும். போட்டியில் பரிசு பெற்றவர்களின் விபரங்கள் தனியாக தெரிவிக்கப்பட்டு மகேந்திரகிரியில் நடக்கும் உலக விண்வெளி வார விழாவில் பரிசுகள் வழங்கப்படும். இதுசம்பந்தமாக மேலும் விபரங்களுக்கு 04637 - 281210/281737, 94421 50183, 94452 86207 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று நிர்வாக அலுவலர் மனோதாஸ் தெரிவித்தார்.


