/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தேங்காய்த்திட்டில் கால்நடை சிகிச்சை முகாம்தேங்காய்த்திட்டில் கால்நடை சிகிச்சை முகாம்
தேங்காய்த்திட்டில் கால்நடை சிகிச்சை முகாம்
தேங்காய்த்திட்டில் கால்நடை சிகிச்சை முகாம்
தேங்காய்த்திட்டில் கால்நடை சிகிச்சை முகாம்
ADDED : செப் 06, 2011 01:00 AM
புதுச்சேரி: கால்நடை பராமரிப்பு மற்றும் நலத்துறை சார்பில் கொம்யூன் வாரியான கால்நடை சிகிச்சை முகாம் துவங்கியது.
தேங்காய்த்திட்டில் நேற்று துவங்கிய முகாமில் துறை இயக்குனர் பத்மநாபன் தலைமையில் இணை இயக்குனர் மனோகரன், கால்நடை டாக்டர்கள் கிரிமெகர்பாபா, செந்தில்குமார், மோகன் ஆகியோர் தலைமையில் மாடு, ஆடு, கோழி உள்ளிட்ட 230க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து, குடற்புழு நீக்கம் மருந்து கொடுக்கப்பட்டது. இன்று (6ம் தேதி) முதல் அடுத்த மாதம் 7ம் தேதி வரை புதுச்சேரி, திருக்கனூர், வில்லியனூர், சிவராந்தகம், மதகடிப்பட்டு ஆகிய மருத்துவமனைக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் கால்நடைகளுக்கு சிறப்பு கிசிச்சை முகாம் நடக்கிறது.