ADDED : செப் 06, 2011 12:59 AM
புதுச்சேரி: ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்விச் செலவு முழுவதையும் அரசே ஏற்க வேண்டும் என பீம்சேனா வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி பீம்சேனா பொதுக்குழு கூட்டம் ரங்கசாமி தலைமையில் நேற்று நடந்தது. பழனிச்சாமி வரவேற்றார். முத்துவேல், மதிவாணன், அர்சுணன் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி, சிறப்புரையாற்றினார். வடிவேல், முருகன், அர்ஜூனன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ஆதி திராவிடர்களுக்கான சிறப்புக் கூறு நிதியை முறையாக செயல்படுத்த கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும். மாணவர்கள் கல்விச் செலவு முழுவதையும் அரசே ஏற்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.