/உள்ளூர் செய்திகள்/கரூர்/வருமான வரித்துறை "அதிரடி' கரூர் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் சோதனைவருமான வரித்துறை "அதிரடி' கரூர் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் சோதனை
வருமான வரித்துறை "அதிரடி' கரூர் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் சோதனை
வருமான வரித்துறை "அதிரடி' கரூர் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் சோதனை
வருமான வரித்துறை "அதிரடி' கரூர் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் சோதனை
கரூர்: கரூரில், அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்த பொன்மலர் ஃபைனான்ஸ் நிறுவனத்தில், நேற்று முன்தினம் இரவு வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர்.
இதையடுத்து, நேற்று முன்தினம் மதியம் 2.30 மணிக்கு, கரூர் டி.எஸ்.பி., மனோகரன் தலைமையிலான போலீஸார், பொன்மலர் ஃபைனான்ஸ் கம்பெனியில் சோதனை நடத்திய போது, கணக்கில் வராத, 46 லட்சத்து 60 ஆயிரத்து 190 ரூபாயை கைப்பற்றினர். ஃபைனான்ஸ் நிறுவனத்தில் கணக்காளராக இருந்த வாங்கப்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார் (30) என்பவரையும், போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, திருச்சி வருமான வரித்துறை துணை இயக்குநர் ஆல்பர்ட் தலைமையில், 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள், பொன்மலர் ஃபைனான்ஸ் கம்பெனியில் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கிருந்த ஆவணங்கள், விசிட்டிங் கார்டுகள், பணம் வரவு செலவு போன்ற விபரங்கள் அடங்கிய முக்கிய ஆவணங்களை, வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். நேற்று முன்தினம் மதியம், கரூரில் பொன் மலர் ஃபைனான்ஸ் கம்பெனியில் லட்சக்கணக்கில் பணம் கைப்பற்ற விபரம் வெளியானவுடன், பெரும்பாலான ஃபைனான்ஸ் கம்பெனிகள் திடீரென மூடப்பட்டது. வருமான வரித்துறை அதிகாரிகளின் அதிரடி சோதனையால், நேற்றும் கரூரில் பெரும்பாலான ஃபைனான்ஸ் நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தது.


