ADDED : ஆக 30, 2011 02:04 AM
நத்தம்:நத்தம், சாணார்பட்டி பகுதிகளில் ரேஷன் நுகர்வோருக்கு, குறைந்த அளவு மண்ணெண்ணெய் வழங்கப்படுவதால் அதிருப்தி நிலவுகிறது.இங்கு 150 க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன.
இவற்றிக்கு, தேவையை விட குறைவாக 70 சதவீதம் மண்ணெண்ணெய் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் நுகர்வோருக்கு முழு அளவு கிடைப்பதில்லை. சில விற்பனையாளர்கள், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் வழங்குகின்றனர். முழு அளவில் மண்ணெண்ணெய் வழங்க அதிகாரிகள் முன் வரவேண்டும்.


