பரமக்குடி: பரமக்குடி அடுத்த நயினார்கோவில் மூவலூரைச் சேர்ந்தவர் அண்ணாத்துரை, 43.
இவருக்கும், மனைவிக்கும் இடையே வீட்டுச் செலவுக்கு பணம் கொடுப்பது குறித்து அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது. நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த அண்ணாத்துரை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி பானுமதி புகார்படி, நயினார்கோவில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


