வீட்டு வேலை செய்யும் பெண்கள் தீர்மானம் : மாதம் 2,500 ரூபாய் சம்பளம் : ஒரு மணி நேரத்திற்கு 30 ரூபாய்
வீட்டு வேலை செய்யும் பெண்கள் தீர்மானம் : மாதம் 2,500 ரூபாய் சம்பளம் : ஒரு மணி நேரத்திற்கு 30 ரூபாய்
வீட்டு வேலை செய்யும் பெண்கள் தீர்மானம் : மாதம் 2,500 ரூபாய் சம்பளம் : ஒரு மணி நேரத்திற்கு 30 ரூபாய்
சென்னை : ''வீட்டு வேலை செய்யும் பெண் தொழிலாளர்களுக்கு மாதம், 2,500 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும்'' என்று, நேற்று சென்னையில் நடந்த தொழிலாளர்கள் உரிமை மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வீட்டு வேலையின் தன்மை அடிப்படையில், பஞ்சப்படியுடனும் கூடிய குறைந்த பட்ச கூலி நிர்ணயம் செய்திட வேண்டும். இவ்வகையில், மாதச் சம்பளம் 2,500 ரூபாய் வழங்க வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு, 30 ரூபாய் சம்பளம் வழங்கப்பட வேண்டும். கதை, சினிமா, நாடகம், 'டிவி' தொடர்களில் வீட்டு வேலை தொழிலாளர்களை இழிவுபடுத்திக் காட்டும் காட்சிகள், ஆபாச சுவரொட்டிகள், ஆபாச சினிமா போன்றவற்றை தடை செய்ய வேண்டும்.
வீட்டு வேலைத் தொழிலாளர்களுக்கு ஏற்படும், பாலியல் வன்முறைகளைப் பற்றிய ஆய்வு செய்ய, மாவட்ட வாரியாக புகார் குழு அமைத்திட வேண்டும். வீட்டு வேலையில், குழந்தை தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுவதை தடுத்து, அவர்களுக்கு கட்டாய கல்வி கிடைக்க வழி செய்ய வேண்டும். நல வாரியத்தில் பதிவு செய்ய, தொழிலாளர்களிடமிருந்து, குறைந்த பட்ச பதிவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது உட்பட, 13 தீர்மானங்கள் இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டையொட்டி, வீட்டு வேலை செய்யும் பெண்களின் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளும் நடந்தன. இவ்வமைப்பின் சார்பில், நேற்று மாலை சென்னை சென்ட்ரல் மெமோரியல் ஹால் அருகில், கோரிக்கை ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. இதில், 300க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.


