நானோ கார் விற்பனை: நேரில் டாடா பார்வை
நானோ கார் விற்பனை: நேரில் டாடா பார்வை
நானோ கார் விற்பனை: நேரில் டாடா பார்வை

விஜயவாடா : பிரபல தொழிலதிபர் ரத்தன்டாடா, தனது நிறுவனத்தின் தயாரிப்பான நானோ கார்களை வாங்கியவர்களை நேரில் சந்தித்து, நானோ காரின் சாவிகளை, காரின் உரிமையாளர்களிடம் வழங்கினார்.
தொழிலதிபர் ரத்தன் டாடாவின் கனவுத் திட்டமான நானோ கார் விற்பனை வளர்ச்சியை, அவரே நேரில் கண்காணித்து வருகிறார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய ரத்தன் டாடா கூறியதாவது : நானோ கார்களை தயாரிப்பதற்கு எத்தனையோ பிரச்னைகளை எதிர்கொள்ள நேர்ந்தது. சாதாரண நடுத்தர குடும்பங்களின் தேவையைக் கருதி இந்த காரை உற்பத்தி செய்து வருகிறோம். தற்போது, நானோ கார் தயாரிப்புத் திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. எனக்கு இது மகிழ்ச்சியை அளிக்கிறது. இவ்வாறு டாடா கூறினார். டிராபிக் நெரிசல்: நானோ கார் விற்பனை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முதன் முறையாக விஜயவாடா நகருக்கு வந்த அவர், டிராபிக் நெரிசலில் சிக்கிக் கொண்டார். லாரி வேலை நிறுத்தத்தின் காரணமாக இங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான லாரி, கார் மற்றும் இதர வாகனங்களும் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. இதனால், ரத்தன் டாடா பயணம் செய்த காரும் நடுவழியில் சிக்கிக் கொண்டது. அவரது கார் நகர முடியாத நிலை ஏற்பட்டதால், 45 நிமிட நேரம் தன் காரில் நேரத்தைக் கழித்தார். பின்னர், வேறு கார் மூலம் சென்று நிகழ்ச்சியில் பங்கேற்றார்.