Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/என்.எல்.சி., கட்டுமானத் தொழிலாளர்கள் "ஸ்டிரைக்'

என்.எல்.சி., கட்டுமானத் தொழிலாளர்கள் "ஸ்டிரைக்'

என்.எல்.சி., கட்டுமானத் தொழிலாளர்கள் "ஸ்டிரைக்'

என்.எல்.சி., கட்டுமானத் தொழிலாளர்கள் "ஸ்டிரைக்'

ADDED : ஆக 20, 2011 02:54 AM


Google News
கடலூர்:நுழைவு வாயிலை மூட உத்தரவிட்ட, என்.எல்.சி., நிர்வாகத்தை கண்டித்து, அனல் மின் நிலைய விரிவாக்கக் கட்டுமானப் பணி தொழிலாளர்கள், நேற்று ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்தனர்.கடலூர் மாவட்டம், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின், இரண்டாம் அனல் மின் நிலையம் விரிவாக்கக் கட்டுமானப் பணி நடைபெருகிறது. இப்பணியில் நெய்வேலி அடுத்த கூனங்குறிச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த, 2,000 பேர் ஈடுபட்டுள்ளனர். கூனங்குறிச்சி கிராமத்தின் மேற்கு பகுதியில் உள்ள நுழைவு வாயில் வழியாக, பணிக்கு வரும் இவர்கள், மதிய உணவிற்கு அவ்வழியே கிராமங்களுக்குச் சென்று வந்தனர். இந்நிலையில், நுழைவு வாயிலை, மதிய நேரத்தில் மூட, என்.எல்.சி., நிர்வாகம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு, நேற்று முதல் அமலுக்கு வந்தது.இதனால், கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், மதிய சாப்பாட்டிற்கு, 6 கி.மீ., தூரம் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளதால், இதைக் கண்டித்து, நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அனல் மின் நிலைய விரிவாக்கக் கட்டுமானப் பணி, நேற்று முற்றிலும் தடைபட்டது. என்.எல்.சி., பொதுமேலாளர் மோகன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

தொழிலாளர்கள் மதிய உணவிற்கு, கிராமத்திற்கு சென்று வர வசதியாக, பகல் ஒரு மணி முதல், 2 மணி வரை திறந்து விடுவதாக, உறுதி அளித்ததைத் தொடர்ந்து, இன்று முதல் பணிக்கு வருவதாக, தொழிலாளர்கள் உறுதி அளித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us