நாகலாம்பட்டில் மனுநீதி நாள் முகாம்
நாகலாம்பட்டில் மனுநீதி நாள் முகாம்
நாகலாம்பட்டில் மனுநீதி நாள் முகாம்
ADDED : ஆக 19, 2011 03:54 AM
செஞ்சி:செஞ்சி தாலுகா நாகலாம்பட்டில் மனு நீதி நாள் கூட்டம்
நடந்தது.தாசில்தார் பரந்தாமன் வரவேற்றார்.
ஒன்றிய சேர்மன் ரத்னா கணபதி,
ஊராட்சி தலைவர் பரிமளம் முன்னிலை வகித்தனர். டி.ஆர்.ஓ., வெங்க டாஜலம்
மனுக்களை பெற்றார்.டி.எஸ்.பி., பன்னீர் செல்வம், மண் டல துணை தாசில்தார்கள்
திருநாவுக் கரசு, சேகர், டி.எஸ்.ஓ., பரமேஸ்வரி, வருவாய் ஆய்வாளர்கள்
கோட்டீஸ் வரன், கண்ணன், செல்வக்குமார், அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர்
பொன்செல்வம் உட்பட பல துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இதில் 23 பேருக்கு
பட்டாமாற்ற உத்தரவு, 3 பேருக்கு குடும்ப நலநிதி, 31 பேருக்கு முதியோர்
உதவித்தொகை, 7 பேருக்கு ரேஷன் கார்டு, ஒருவருக்கு இலவச மனை பட்டா,
ஒருவருக்கு தையல் இயந்திரம், ஓய்வூதிய நிலுவை தொகை, மகளிர்
சுயஉதவிக்குழுவினருக்கு வங்கி கடன், வேளாண் இடு பொருட்கள் வழங்கப்பட்டன.
இதில் 228 மனுக்கள் பெறப்பட்டன. 75 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை
எடுக்கப்பட்டது.


