Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/களிமண் லோடு லாரி மோதிபைக்கில் சென்ற 2 பேர் பலி

களிமண் லோடு லாரி மோதிபைக்கில் சென்ற 2 பேர் பலி

களிமண் லோடு லாரி மோதிபைக்கில் சென்ற 2 பேர் பலி

களிமண் லோடு லாரி மோதிபைக்கில் சென்ற 2 பேர் பலி

ADDED : ஆக 19, 2011 03:11 AM


Google News
பண்ருட்டி:லாரி மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் இறந்தனர்.கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த இருப்புகுறிச்சியைச் சேர்ந்தவர் வீரமணி, 27 .

இதே பகுதி காலனியைச் சேர்ந்த பட்டுசாமி, 50. இவர்கள் இருவரும் உறவினர் கருமகாரிய பத்திரிகை கொடுக்க நேற்று முன்தினம் ஹீரோ ஹோண்டா மோட்டார் பைக்கில் முத்தாண்டிக்குப்பம் சென்றனர்.பின் இரவு 8 மணியளவில் முத்தாண்டிக்குப்பத்தில் இருந்து இருப்புகுறிச்சிக்கு காட்டுக்கூடலூர் மெயின்ரோடு வழியாக மோட்டார் பைக்கில் திரும்பிக்கொண்டிருந்தனர். வீரசிங்கன்குப்பம் மெயின்ரோட்டில் எதிரில் வெள்ளை களிமண் ஏற்றி வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் வீரமணி, பட்டுசாமி இருவரும் இறந்தனர்.முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து லாரி டிரைவரை தேடி வருகிறார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us