ADDED : ஆக 18, 2011 12:30 AM
பண்ருட்டி : பண்ருட்டி நகர அ.தி.மு.க., சார்பில் அ.தி.மு.க., அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
நகர செயலர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். அவைத் தலைவர் ராஜதுரை வரவேற்றார். முன்னாள் மாவட்ட ஜெ., பேரவை செயலர் பன்னீர்செல்வம், ஒன்றிய செயலர் விபீஷணன், மாவட்ட பொருளாளர் ஜானகிராமன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அமைச்சர் சம்பத், முன்னாள் அமைச்சர் அருணாசலம், தலைமை கழக பேச்சாளர் மணி ஆகியோர் அரசின் பட்ஜெட் குறித்து சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் சிவராமன், நகர ஜெ., பேரவை செயலர் செல்வம், முன்னாள் ஜெ., பேரவை செயலர் கமலக்கண்ணன், கவுன்சிலர்கள் முருகன், கார்த்திக், தர்கா கமிட்டி தலைவர் தாஜூதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


