11வது ஐந்தாண்டு திட்டத்தில் நாட்டின் மொத்த வளர்ச்சி 3.2 சதவீதம்
11வது ஐந்தாண்டு திட்டத்தில் நாட்டின் மொத்த வளர்ச்சி 3.2 சதவீதம்
11வது ஐந்தாண்டு திட்டத்தில் நாட்டின் மொத்த வளர்ச்சி 3.2 சதவீதம்
ADDED : ஆக 18, 2011 12:21 AM
சென்னை : 'கடந்த 11வது ஐந்தாண்டு திட்டத்தில் மொத்த வளர்ச்சி 4 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், 3.2 சதவீதம் மட்டுமே வளர்ச்சியடைந்துள்ளது' என்று, 12வது ஐந்தாண்டு திட்ட ஆலோசனைக் கூட்டத்தில் திட்டக்குழு உறுப்பினரும், உயர்மட்டக்குழு தலைவர் பேராசிரியர் அபிஜித் சென் கூறினார். இந்தியாவிற்கான 12வது ஐந்தாண்டு திட்டம் தயாரிப்பதற்காக, இந்திய அரசின் திட்டக் குழுவின் வேளாண்மை அதன் தொடர்புடைய தோட்டக்கலை, கால்நடை, பால்வளம், மீன்வளம் என பல்வேறு துறைகளின் உயர்மட்ட குழுவின் மூன்றாவது கூட்டம், சென்னையில் நேற்று நடைபெற்றது. இது குறித்து திட்டக் குழு உறுப்பினரும், உயர்மட்டக் குழுவின் தலைவர் பேராசிரியர் அபிஜித் சென் கூறியதாவது: கடந்த 11வது ஐந்தாண்டு திட்டத்தில் ,மொத்த வளர்ச்சி 4 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், கடந்த 11வது ஐந்தாண்டு திட்டத்தில் 3.2 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. எனவே, அடுத்த 12வது ஐந்தாண்டு திட்ட எல்லையாக 4 சதவீதமாக நிர்ணயிக்கப்படும். இந்தியாவில் இருந்து வேளாண்மை பொருட்களை ஏற்றுமதி செ#யலாம். அது குறித்து இத்துறையின் அமைச்சர்களிடம் பேச்சு நடத்தப்படும். இரண்டு நாள் கருத்தரங்கில், வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை, பால்வளம், மீன்வளம் என பல்வேறு துறைகளில் எந்த மாதிரி திட்டங்களை வகுக்கலாம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டு, அந்த அறிக்கையை, வரும் சனிக்கிழமை பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து அளிக்கப்படும்.
இவ்வாறு அபிஜித் சென் பேசினார். தேசிய தோட்டக்கலை வாரிய மேலாண்மை இயக்குனர் பிஜா#குமார் கூறும்போது,'இந்தியாவில் ஒருபுறம் விளைச்சல் அதிகமாக உள்ளது. மறுபுறம் விளைச்சல் குறைவாக இருக்கிறது. விளைச்சல் அதிகமுள்ள பகுதியிலிருந்து, குறைவான விளைச்சல் பகுதிக்கு விளைபொருட்களை ரயில், கப்பல், லாரி மூலம் எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது. இதனால், விளைபொருட்கள் 25 சதவீதம் வீணாகிவிடுகிறது. விவசாய பொருட்கள் வீணாவதை தடுக்க தேசிய பழ ஆரா#ச்சி வாரியம், புதிதாக குளிர்பதன கன்டெ#னர் திட்டத்தை பரீட்சார்த்த முறையில் அறிமுகப்படுத்தியுள்ளது' என்றார்.


