"எம்பிராய்டரி' பட்டுப் புடவைகள், பாவாடைகள் :கோ - ஆப்டெக்சின் தீபாவளி ஸ்பெஷல் தயாராகிறது
"எம்பிராய்டரி' பட்டுப் புடவைகள், பாவாடைகள் :கோ - ஆப்டெக்சின் தீபாவளி ஸ்பெஷல் தயாராகிறது
"எம்பிராய்டரி' பட்டுப் புடவைகள், பாவாடைகள் :கோ - ஆப்டெக்சின் தீபாவளி ஸ்பெஷல் தயாராகிறது
ADDED : ஆக 18, 2011 12:09 AM
சென்னை : ''எம்பிராய்டரி' பட்டுப் புடவைகள், பாவாடைகள் உள்ளிட்ட புதிய
ரகங்களை தீபாவளி விற்பனைக்கு அறிமுகம் செய்ய, கோ - ஆப்டெக்ஸ் ஏற்பாடு
செய்துள்ளது'' என, கோ - ஆப்டெக்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குனர் உமா சங்கர்
தெரிவித்தார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:கோ - ஆப்டெக்ஸ் நிறுவனம்,
தனியார் நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவுவதால், கோ - ஆப்டெக்ஸ்
நிறுவனம், விற்பனையை அதிகரிக்க, புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
தனியார்
நிறுவனங்கள் தங்கள் கடைகளில், பட்டுப் புடவையின் பெயரில், 'பாலிஸ்டர்'
புடவைகளை கொடுத்து மக்களை ஏமாற்றி வருகின்றன. இதனால், மக்கள் அவர்களை
நம்பி ஏமாறுவதைத் தடுக்க, கோ - ஆப்டெக்ஸ் உற்பத்தி சங்கங்களின் மூலம்,
புதிய ரக புடவைகளை அறிமுகப்படுத்த உள்ளது. வரும் தீபாவளியில் விற்பனையை
அதிகரிக்க, 'வேலைப்பாடு மிகுந்த எம்பிராய்டரி பட்டுப் புடவைகள், பாலிஸ்டர்
எம்பிராய்டரி புடவைகள், எம்பிராய்டரி பட்டுப் பாவாடைகள்' உள்ளிட்டவை
அறிமுகம் செய்யப்பட உள்ளன. தீபாவளிக்குள் 15 ஆயிரம், 'வேலைப்பாடு மிகுந்த
எம்பிராய்டரி பட்டுப் புடவைகள்' உற்பத்தி செய்ய இலக்கு
நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 5,000 முதல் 6,000 ரூபாய் வரை
இருக்கும். அதுபோல், 50 ஆயிரம், 'பாலிஸ்டர் எம்பிராய்டரி புடவைகள்'
உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் விலை, 500 முதல் 600
ரூபாய் வரை இருக்கும். இதுதவிர, 5,000 எம்பிராய்டரி பட்டுப் பாவாடைகள்
உற்பத்தி செய்ய உள்ளன. இதன் விலை 2,000 முதல் 2,500 ரூபாய் வரை இருக்கும்.
இவை அனைத்தும், இதுவரை அறிமுகம் செய்யப்படாத புதிய ரகம் என்பது
குறிப்பிடத்தக்கது. விரைவில் அறிமுகமாக இருக்கும் புதிய ரக புடவைகளின்
விற்பனை அளவைப் பொறுத்து, நெசவாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.
விற்பனையில் கிடைக்கும் லாபத்தில், அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
உற்பத்தியை அதிகரிக்க நெசவாளர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். கோ - ஆப்டெக்ஸ்
கடைகளுக்கு வினியோகம் செய்யப்படும் துணிகளின் தரம் குறைவாக இருந்தால், அதை
உற்பத்தி செய்த நெசவாளர் சங்கத்திற்கு, 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம்
விதிக்கப்படும். துணிகள் தரமானவையா என்பதை சரிபார்க்க, மூன்று தரப்
பரிசோதகர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதனால், துணிகள் உற்பத்தி செய்யும்
சங்கங்கள் தரமான துணிகளை உற்பத்தி செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள, 200
கோ - ஆப்டெக்ஸ் கடைகளின் விற்பனையாளர்களுக்கு, 'வீடியோ' காட்சிகளின் மூலம்
பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியை, கோ - ஆப்டெக்ஸ் நிறுவன மேலாண்மை
இயக்குனரே அளிக்கிறார். இதன் மூலம், வாடிக்கையாளரிடம் நடந்து கொள்ளும்
முறை, வாடிக்கையாளரை அணுகும் முறைகள் பற்றிய பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதுதவிர, ஒப்பந்த அடிப்படையில் விற்பனையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இவர்கள் பணிபுரிவதைப் பொறுத்து, ஒப்பந்த கால அளவு நீட்டிக்கப்படும்.
இவ்வாறு உமா சங்கர் கூறினார்.


