ADDED : ஆக 17, 2011 03:52 AM
ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் பி.பி.ஜெ., கல்வி நிறுவனங்களின் நிர்வாகிக்கு கே.ஆர்.நாராயணன் விருது வழங்கப்பட்டது.
தலித் சாகித்ய அகாடமி சார்பில் ஆண்டுதோறும் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் வேளாங்கண்ணியில் நடந்த விருது வழங்கும் விழாவில் ஸ்ரீமுஷ்ணம் பி.பி.ஜெ., கல்வி நிறுவனங்களின் நிர்வாகி பிரகாஷூக்கு கல்விப் பணியை பாராட்டி முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் விருது வழங்கப்பட்டது. தலித் சாகித்ய அகாடமி தலைவர் சுமன்னார் சிங் விருதினை வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து சமுதாயப் பணிக்கான விருது அரசு ஊழியர் சேகருக்கு வழங்கப்பட்டது.
இதில் மாநில நிர்வாகிகள் டாக்டர் கோபி சந்திரன், மாநில பொதுச் செயலர் பாண்டியன், மாநில பொருளாளர் கங்காதரன், ஆசிரியர் ஜவகர் நாராயணசாமி பங்கேற்றனர்.


