/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/திருட்டு புகார் தவிர்க்க பொறியாளர் அறிவுறுத்தல்திருட்டு புகார் தவிர்க்க பொறியாளர் அறிவுறுத்தல்
திருட்டு புகார் தவிர்க்க பொறியாளர் அறிவுறுத்தல்
திருட்டு புகார் தவிர்க்க பொறியாளர் அறிவுறுத்தல்
திருட்டு புகார் தவிர்க்க பொறியாளர் அறிவுறுத்தல்
ADDED : ஆக 17, 2011 02:53 AM
நாமக்கல்: 'மின்நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் மின்வாரிய பொருள் திருட்டு சம்மந்தப்பட்ட புகாரை தவிர்க்க வேண்டும்' என, நாமக்கல் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தின் வழிகாட்டுதல்படி நாமக்கல் மின் பகிர்மான வட்டத்தில் மாவட்ட கலெக்டரால் நியமிக்கப்பட்ட இரு உறுப்பினர்களைக் கொண்ட மின் நுகர்வோர் குறைதீர் மன்றம் இயங்கி வருகிறது. இம்மன்றம் நாமக்கல் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் மன்ற கூட்டங்களை நடத்துகிறது. அந்த மன்றத்தில் மின்திருட்டு, மின்வாரிய பொருள்களை திருடுதல், மின்சார மீட்டர்களை சேதப்படுத்துதல், மின்வாரிய பணிகளை உள்நோக்கோடு தடுத்தல் தெருவிளக்குகளை சேதப்படுத்துதல் போன்ற புகார்கதளை தவிர்க்க வேண்டும். நுகர்வோரால் பதஇவு செயயப்பட வேண்டிய புகார் படிவ நகவல்கள் சம்ந்தப்பட்ட பிரிவு அலுவலகங்களிலும் செயற்பொறியாளர் அலுவலங்களிலும், மத்திய அலுவலகத்திலும் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். விருப்பமுள்ள மின்நுகர்வோர் புகார் படிவத்தை நாமக்கல் மின் பகிர்மான வட்ட மத்திய அலுவலகத்திலுள்ள மன்றத்தில் அலுவலக வேலைநாட்களில் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


