பாரிஸ் என்று செல்லமாக அழைக்கப்படும் பாரிமுனை சென்னையின் மத்திய வணிகப் பகுதி.
சென்னை துறைமுகத்தின் அருகில் வடக்கு கடற்கரை சாலை மற்றும் என்.எஸ்.சி., போஸ் சாலை சந்திக்கும் பகுதியில் 1787ல் தாமஸ் பாரி, வேல்ஸ் ஆகிய வணிகர்கள் இ.ஐ.டி., கம்பெனியை நிறுவினர். வங்கி மற்றும் வணிகத்திற்கு பிரதான இடமாக இப்பகுதி மாறியதால் பாரிமுனை எனப் பெயர் பெற்றது.


