Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/கார்-தனியார் பஸ் மோதி விபத்து ஒருமணி நேரம் "டிராஃபிக் ஜாம்'

கார்-தனியார் பஸ் மோதி விபத்து ஒருமணி நேரம் "டிராஃபிக் ஜாம்'

கார்-தனியார் பஸ் மோதி விபத்து ஒருமணி நேரம் "டிராஃபிக் ஜாம்'

கார்-தனியார் பஸ் மோதி விபத்து ஒருமணி நேரம் "டிராஃபிக் ஜாம்'

ADDED : ஆக 15, 2011 02:06 AM


Google News
சேந்தமங்கலம்: கார் மீது பஸ் மோதியதை தொடர்ந்து, தனியார் பஸ் மேலாளர் மற்றும் வாலிபர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால், காளப்பநாயக்கனப்பட்டியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

திருச்சியை சேர்ந்த ஐந்து பேர் காரில் கொல்லிமலைக்கு சென்றுவிட்டு, நேற்றும மாலை 5 மணிக்கு ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, காளப்பநாயக்கன்பட்டி பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது, கொல்லிமலை நோக்கி சென்ற பி.எஸ்.கே., என்ற தனியார் பஸ், எதிர்பாராதவிதமாக கார் மீது மோதியது. இந்த விபத்தில் கார் சேதமடைந்தது. இது குறித்து வாலிபர்களுக்கும், பஸ் மேலாளர் அசோகனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனால், அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. தகவல் அறிந்த சேந்தமங்கலம் போலீஸார், சம்பவ இடத்துக்கு உடனடியாக வரவில்லை. அதனால், சேந்தமங்கலம்-ராசிபுரம், சேந்தமங்கலம்-கொல்லிமலை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. அதனால், பஸ்சில் இருந்த பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us