/உள்ளூர் செய்திகள்/மதுரை/வன்முறை தடுப்பு மசோதா பிரசாரம் செய்ய முடிவுவன்முறை தடுப்பு மசோதா பிரசாரம் செய்ய முடிவு
வன்முறை தடுப்பு மசோதா பிரசாரம் செய்ய முடிவு
வன்முறை தடுப்பு மசோதா பிரசாரம் செய்ய முடிவு
வன்முறை தடுப்பு மசோதா பிரசாரம் செய்ய முடிவு
ADDED : ஆக 15, 2011 01:50 AM
மதுரை : மதுரையில் இந்து வக்கீல்கள் முன்னணி சார்பில், தேசப் பிரிவினையும், வகுப்புவாத வன்முறை தடுப்பு மசோதாவும் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.நிர்வாகி ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
அமைப்பாளர் முருகானந்தம் தேசப்பிரிவினை குறித்து பேசினார். ஐகோர்ட் வக்கீல் ஜி.ஆர்.சுவாமிநாதன் பேசியதாவது:வகுப்புவாத வன்முறை தடுப்பு மசோதா இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது.
மக்களை பிளவுப்படுத்தக்கூடியது. பாதுகாப்பு அமைப்புகளுக்கு எதிரானது. இம்மசோதா சட்டமாக்குவதற்கு முன், இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் செய்ய வேண்டும். குற்றவியல் நடைமுறை சட்டத்தில், அரசு தரப்பில் நிரூபிக்க வேண்டும். ஆனால் வன்முறை தடுப்புச் சட்டத்தில், குற்றம்சாட்டப்பட்டவரே தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. சில மதத்தினரின் ஓட்டுகளை மனதில் வைத்து இம்மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது, என்றார்.


