/உள்ளூர் செய்திகள்/மதுரை/டூவீலர் மீது மினி லாரி மோதி வாலிபர் பலி; பெண் காயம்டூவீலர் மீது மினி லாரி மோதி வாலிபர் பலி; பெண் காயம்
டூவீலர் மீது மினி லாரி மோதி வாலிபர் பலி; பெண் காயம்
டூவீலர் மீது மினி லாரி மோதி வாலிபர் பலி; பெண் காயம்
டூவீலர் மீது மினி லாரி மோதி வாலிபர் பலி; பெண் காயம்
ADDED : ஆக 15, 2011 01:47 AM
விக்கிரமங்கலம் : விக்கிரமங்கலம் அருகே மினிலாரி மோதியதில் டூவீலரில் சென்ற வாலிபர் பலியானார்.
உடன் சென்ற பெண்ணுக்கு கால் முறிவு ஏற்பட்டது. ஆண்டிப்பட்டியை சேர்ந்த சந்திரன் மகன் ராஜேஷ்குமார் (19). விக்கிரமங்கலம் அருகே கீழபெருமாள்பட்டியில் வசிக்கும் உறவினர் வீட்டிற்கு அத்தை ராஜம்மாளுடன்(50), வாலிபர் ராஜேஷ்குமார் (ஹெல்மெட் அணியவில்லை) டூவீலரில் சென்றார். எதிரே வந்த மினிலாரி டூவீலர் மீது மோதியது. இதில் காயமடைந்த ராஜேஷ்குமார் மதுரை தனியார் ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லும் வழியில் இறந்தார். கால்முறிந்த நிலையில் ராஜம்மாள் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். போலீசார் விசாரிக்கின்றனர்


