/உள்ளூர் செய்திகள்/மதுரை/குன்றத்தில் பாதி எரிந்த நிலையில் ஆண் பிணம்குன்றத்தில் பாதி எரிந்த நிலையில் ஆண் பிணம்
குன்றத்தில் பாதி எரிந்த நிலையில் ஆண் பிணம்
குன்றத்தில் பாதி எரிந்த நிலையில் ஆண் பிணம்
குன்றத்தில் பாதி எரிந்த நிலையில் ஆண் பிணம்
ADDED : ஆக 15, 2011 01:47 AM
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் அருகே பாதி எரிந்த நிலையில் கிடந்த ஆண் பிணத்தை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருப்பரங்குன்றம்-நிலையூர் ரோட்டில், ஓம்சக்திநகரில் முட்செடிகள் வளர்ந்த பகுதியில், முகம் கருகி, உடல் பாதி எரிந்த நிலையில் ஆண் பிணம் கிடந்தது. எஸ்.பி., ஆஸ்ரா கர்க் தலைமையில் டி.எஸ்.பி., முருகேசன், இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பிணத்தின் கழுத்தில் இறுக்கப்பட்டிருந்த துண்டும் கருகிய நிலையில் இருந்தது. கொலையாளிகள் அவரை வேறிடத்தில் கொலை செய்து, இங்கு வந்து எரிந்தனரா?, அல்லது அப்பகுதிக்கு கடத்தி வந்து, கழுத்தை நெரித்து கொலை செய்து எரிக்கப்பட்டாரா? என போலீசார் விசாரிக்கின்றனர். கருகிய பிணத்தின் அடியில் உரப்பொடி சாக்கு விரிக்கப்பட்டிருந்ததாகவும், வேட்டி, காக்கி சட்டை அணிந்திருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து திருநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


