ADDED : ஆக 15, 2011 01:18 AM
அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் இன்று சுதந்திரதின வி ழா கொண்டாடப்படுகிறது.
அரியலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:இந்தியாவின் 65வது சுதந்திரதின விழா, அரியலூர் மாவட்டத்தில் நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதையொட்டி அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், இன்று காலை 9.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அனு ஜார்ஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்து, போலீஸ்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொள்கிறார். இதையடுத்து சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவப்படுத்தி, பொதுமக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். தொட ர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.


