ஆறுகளில் மணல் திருட்டை தடுக்க கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதா?அரசு தரப்புக்கு ஐகோர்ட் கேள்வி
ஆறுகளில் மணல் திருட்டை தடுக்க கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதா?அரசு தரப்புக்கு ஐகோர்ட் கேள்வி
ஆறுகளில் மணல் திருட்டை தடுக்க கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதா?அரசு தரப்புக்கு ஐகோர்ட் கேள்வி
ADDED : ஆக 12, 2011 03:11 AM
மதுரை:தமிழக ஆறுகளில் மணல் திருட்டை கண்காணிக்க கமிட்டிகள் அமைக்க எடுத்த
நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி அரசு தரப்புக்கு மதுரை
ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.சிவகங்கை திருப்புவனம் தேளியை சேர்ந்த உலகநாதன்
உட்பட நால்வர் தாக்கல் செய்த பொது நல வழக்குகளில், ''வைகை ஆற்றில் மணல்
அள்ளுவதை தடுத்து நிறுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும்,'' என கோரினர்.
இருக்கன்குடி வைப்பாற்றில் மணல் அள்ள தடை விதிக்க கோரியும் பொது நல
வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.வழக்குகள் நேற்று நீதிபதிகள் பி.ஜோதிமணி,
எம்.எம்.சுந்தரேஷ் முன் விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் சார்பில்
வக்கீல்கள் கே.ஜெகநாதன், அருள்வடிவேல்சேகர் ஆஜராயினர். அரசு தரப்பில்
கூடுதல் அட்வகேட் ஜெரனல் செல்லப்பாண்டியன், சிறப்பு பிளீடர் மகேந்திரன்
ஆஜராயினர். தமிழக ஆறுகளில் மணல் திருட்டை கண்காணிக்கவும், தடுக்கவும்,
மாநில, மாவட்ட அளவில் கமிட்டி அமைக்க ஏற்கனவே ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
அதன்படி கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதா? என நீதிபதிகள் அரசு தரப்பினரிடம்
கேள்வி எழுப்பினர்.பின் நீதிபதிகள், ''கமிட்டி அமைக்க எடுக்கப்பட்ட
நடவடிக்கைகள் குறித்து அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெரனல் ஆக., 16ல்
அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,'' என உத்தரவிட்டனர்.


