ADDED : ஆக 09, 2011 01:14 AM
விருதுநகர் : ஸ்ரீவில்லிப்புத்தூர் கூனங்குளத்தை சேர்ந்தவர் சக்திவேல்(56).இவருக்கு பட்டங்குளம் பகுதியில் 6.5 ஏக்கர் நிலம் உள்ளது.
இந்த நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து மோசடியாக விற்பனை செய்ததாக, மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடுத்தார். நீதிபதி உத்தரவின் படி சொக்கலாம்பட்டியை சேர்ந்த மணிகண்டன்(36) எம்.வேலுச்சாமி(65) கருப்பசாமி(41) சுந்தரி(39) வள்ளி(37) தங்கம்(57) ஆகிய ஆறு பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


