/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/குடி நீர் பிரச்னையை தீர்க்க அமைச்சர் உறுதிகுடி நீர் பிரச்னையை தீர்க்க அமைச்சர் உறுதி
குடி நீர் பிரச்னையை தீர்க்க அமைச்சர் உறுதி
குடி நீர் பிரச்னையை தீர்க்க அமைச்சர் உறுதி
குடி நீர் பிரச்னையை தீர்க்க அமைச்சர் உறுதி
ADDED : ஆக 09, 2011 01:14 AM
ராஜபாளையம் : சாத்தூர் தொகுதியில் உள்ள சத்திரப்பட்டி, சமுசிகாபுரம், சங்கரபாண்டியபுரம் வாக்காளர்களுக்கு அமைச்சர் உதயகுமார் நேற்று முன்தினம் நன்றி கூறினார்.
அவருடன் முன்னாள் எம்.எல்.ஏ., சந்திரா, ஒன்றிய ஜெ., பேரவை செயலாளர் வேல்முருகன் உள்பட அ.தி.மு.க., நிர்வாகிகள் சென்றனர். வாக்காளர்களிடம் அமைச்சர் பேசுகையில், '' இப்பகுதி பேண்டேஜ் தொழில் முன்னேற்றத்திற்கும், குடிநீர் பிரச்னையை தீர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.


