Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/நெரிசலை கட்டுப்படுத்த பஸ் ஸ்டாண்ட் இடம் மாற்றணும்: நாடார் சங்கம் கோரிக்கை

நெரிசலை கட்டுப்படுத்த பஸ் ஸ்டாண்ட் இடம் மாற்றணும்: நாடார் சங்கம் கோரிக்கை

நெரிசலை கட்டுப்படுத்த பஸ் ஸ்டாண்ட் இடம் மாற்றணும்: நாடார் சங்கம் கோரிக்கை

நெரிசலை கட்டுப்படுத்த பஸ் ஸ்டாண்ட் இடம் மாற்றணும்: நாடார் சங்கம் கோரிக்கை

ADDED : ஆக 08, 2011 03:13 AM


Google News
நாமக்கல்: 'நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், நாமக்கல் பஸ் ஸ்டாண்டை இடமாற்றம் செய்ய வேண்டும்' என, பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாடார்கள் உறவின்முறை சங்கத்தின், 13ம் ஆண்டு விழா, காமராஜரின், 109ம் ஆண்டு பிறந்த நாள் விழா மற்றும் சங்க பொதுக்குழு கூட்டம், நாமக்கல்லில் நேற்று நடந்தது. சங்கத் தலைவர் மூக்கையா தலைமை வகித்தார். நிர்வாகி செல்வராஜ் வரவேற்றார். திண்டுக்கல் நாடார்கள் ஐக்கிய சங்கத் தலைவர் காசிராஜன், கவுரவ தலைவர்கள் பொன்சிங், டென்சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் மழைக்காலங்களில் தண்ணீர் வீணாகிறது. அந்த தண்ணீரை பெரிய அணை ஒன்று கட்டி தேக்கி வைத்து, பலஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறச் செய்யலாம். மேலும், கொல்லிமலையை சுற்றி உள்ள நான்கு பெரிய ஏரிகளை மராமத்து பணி மேற்கொண்டு, மலையில் இருந்து சரியான கால்வாய்கள் அமைத்து, தண்ணீரை வீணக்காமல் பாசன வசதி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். நாமக்கல் நகரில், சமீபகாலமாக வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும், காலை, மாலை வேளைகளில் கல்வி நிறுவனங்களின், 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்வதாலும், கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதனால், மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். அதை கருத்தில் கொண்டு, நாமக்கல் பஸ் ஸ்டாண்டை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். சமீப காலமாக தொழிலாளர் பற்றாக்குறையால், நாமக்கல்லில் லாரி பாடிகட்டும் தொழில் மற்றும் லாரி சம்பந்தமான தொழில்கள் நலிந்து வருகிறது. அதற்காக தனி வாரியம் அமைத்து, அத்தொழிலை காப்பாற்ற, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்விக்கண் திறந்த காமராஜரின் பிறந்த நாளை, தமிழக அரசு விடுமுறை தினமாக கடைபிடிக்க வேண்டும். நில அபகரிப்பு தொடர்பாக அரசு கடைபிடிக்கும் கொள்கை சரியானதே என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியில், சங்க பொருளாளர் ராஜ்குமார், இயக்குனர்கள் செல்வம், துரைசாமி, மாநில, மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us