/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா: நாமக்கல் அருகே வினோதம்ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா: நாமக்கல் அருகே வினோதம்
ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா: நாமக்கல் அருகே வினோதம்
ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா: நாமக்கல் அருகே வினோதம்
ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா: நாமக்கல் அருகே வினோதம்
ADDED : ஆக 08, 2011 03:13 AM
நாமக்கல் : ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா, நாமக்கல் அருகே கடந்த, 10 ஆண்டுகளாக நடந்து வருகிறது.
இவ்விழாவில், குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த ஏராளமான ஆண்கள் பங்கேற்று, ஸ்வாமி வழிபாடு செய்தனர். நாமக்கல் அடுத்த நல்லிபாளையம், முத்துக்குமார் தவுட்டு ஆலை அருகில், 24 மனை தெலுங்கு செட்டியார் சமூகத்துக்கு சொந்தமான அன்னை காமாட்சியம்மன் வழிபாட்டு தலம் உள்ளது. இங்கு, ஆண்டு தோறும் ஆடி மாதம் ஸ்வாமிக்கு திருவிழா நடத்தப்படுவது வழக்கம். கடந்த ஒன்பது ஆண்டுகளாக நடந்து வரும் இந்த திருவிழா, இந்த ஆண்டு,10 ஆண்டாக சிறப்பாக கொண்டாடப்பட்டது. காமாட்சியம்மன் வழிபாட்டு திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. அன்று இரவு 9 மணிக்கு, காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வருதல் மற்றும் சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. தீர்த்தக்குடங்களை, திருமணமாகாத வாலிபர்கள் எடுத்து வந்தனர். அதை தொடர்ந்து, புற்றுக்கண்ணில் இருந்து மண் எடுத்து வரப்பட்டு ஸ்வாமி உருவம் செய்தனர். நேற்று மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கிடா வெட்டி ஸ்வாமிக்கு பலி கொடுக்கப்பட்டது. தொடர்ந்து, அசைவ விருந்து அனைவருக்கும் பரிமாறப்பட்டது. அதில் ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்களுக்கும், வெளி நபர்களுக்கும் அனுமதியில்லை. கடந்த, 10 ஆண்டுகளாக தொடரும் இந்த வினோத திருவிழாவில், 24 மனை தெலுங்கு செட்டியார் சமூகத்தினர் மட்டுமே பங்கேற்று வருகின்றனர்.இது குறித்து அச்சமூகத்தினர் சிலர் கூறியதாவது: எங்களது சமூகத்தினர் சார்பில், கடந்த, 10 ஆண்டுகளாக ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் காமாட்சி அம்மன் வழிபாட்டு திருவிழாவை கொண்டாடி வருகிறோம். இந்த திருவிழாவில் பெண்களுக்கும், வெளி நபர்களும் பங்கேற்க அனுமதி கிடையாது. இத்திருவிழா இரண்டு நாட்கள் நடக்கும். கிடா வெட்டி கறி விருந்து பரிமாறப்படும். மீதமான சாப்பாட்டை வீட்டுக்கு எடுத்துச் செல்லக்கூடாது. அதற்காக குழி ஏற்படுத்தப்பட்டு, அதில் மீதமான சாப்பாட்டை கொட்டி மூடிவிடுவோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


