/உள்ளூர் செய்திகள்/சேலம்/ஆம்னி பஸ்களில் சுத்தி பொருத்த அரசு உத்தரவுஆம்னி பஸ்களில் சுத்தி பொருத்த அரசு உத்தரவு
ஆம்னி பஸ்களில் சுத்தி பொருத்த அரசு உத்தரவு
ஆம்னி பஸ்களில் சுத்தி பொருத்த அரசு உத்தரவு
ஆம்னி பஸ்களில் சுத்தி பொருத்த அரசு உத்தரவு
ADDED : ஆக 08, 2011 03:04 AM
மேட்டூர்: ஆம்னி பஸ்களில், விபத்து மற்றும் அவசர காலத்தில் பயணிகள் வெளியேறுவதற்கு வசதியாக ஜன்னல் அருகில் சுத்தி பொருத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகிறது. பெரும்பாலான ஆம்னி பஸ்களில் ஏ.சி., இருப்பதால், ஜன்னல் கண்ணாடிகள் திறக்க முடியாத அளவுக்கு லாக் செய்யப்பட்டிருக்கும். ஏ.சி., இல்லாத பெரும்பாலான ஆம்னி பஸ்களிலும் ஜன்னல் கண்ணாடிகள் பயணிகள் திறக்க முடியாத அளவுக்கு லாக் செய்யப்படுகிறது. அதனால், விபத்து காலத்தில் பயணிகள் ஜன்னல் கண்ணாடியை திறந்தோ, உடைத்தோ தப்பிக்க வழியின்றி பஸ்ஸிற்குள்ளேயே பலியாகி விடுகின்றனர். இரு மாதங்களுக்கு முன் வேலூர் அருகே ஆம்னி பஸ் விபத்துக்குள்ளானதில் பயணிகள் வெளியேற முடியாமல் பஸ்ஸிலேயே எரிந்து கரிக்கட்டைகளாக மாறினர். எனவே, ஆம்னி பஸ்களில் பயணிகள் அவசர மற்றும் விபத்து காலங்களில் உடனடியாக வெளியேறும் வகையில் பஸ்களில் வசதிகளை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஆம்னி பஸ்களில் கண்டிப்பாக அவசரகால கதவு (எமர்ஜன்சி எக்ஸைட்) பொருத்த வேண்டும். கதவு 80 செ.மீ., அகலத்துக்கு குறையாமல் இருக்க வேண்டும். அனைத்து ஆம்னி பஸ்களிலும் தீயணைப்பு கருவி பொருத்தியிருக்க வேண்டும். வாசல் கதவுகளை திறப்பதற்கான 'ஸ்விட்ச்' டிரைவர் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். அவசர மற்றும் விபத்து காலத்தில் பயணிகள் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து தப்பிக்க வசதியாக, ஜன்னலோரங்களில் சுத்தி (ஹேமர்) பொருத்த வேண்டும். அனைத்து ஆம்னி பஸ்களிலும் உத்தரவை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும். வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தினமும் இதை கண்காணித்து, தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு உத்தரவை தொடர்ந்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆம்னி பஸ்களை தீவிர சோதனை செய்து, தலைமை அலுவலகத்துக்கு அறிக்கை அனுப்புகின்றனர்.


