/உள்ளூர் செய்திகள்/சேலம்/தம்பியை கொலை செய்து நாடகமாடிய "பாசக்கார' அண்ணன் அதிரடி கைதுதம்பியை கொலை செய்து நாடகமாடிய "பாசக்கார' அண்ணன் அதிரடி கைது
தம்பியை கொலை செய்து நாடகமாடிய "பாசக்கார' அண்ணன் அதிரடி கைது
தம்பியை கொலை செய்து நாடகமாடிய "பாசக்கார' அண்ணன் அதிரடி கைது
தம்பியை கொலை செய்து நாடகமாடிய "பாசக்கார' அண்ணன் அதிரடி கைது
ADDED : ஆக 08, 2011 03:04 AM
இடைப்பாடி: தம்பியை கொலை செய்து விட்டு, விபத்தில் இறந்து விட்டதாக கூறி நாடகமாடியவரை, பூலாம்பட்டி போலீஸார் கைது செய்தனர்.
இடைப்பாடி அருகே உள்ள பக்கநாடு பகுதியை சேர்ந்தவர் சித்தன். இவரது மகன்கள் பழனிச்சாமி(27), சின்னதம்பி(22). கடந்த 3ம் தேதி இரவு, பக்கநாடு பகுதியில் உள்ள வேதகாளி முனியப்பன் கோவில் அருகே சின்னதம்பி அடிபட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார். வாகனம் மோதியதால் சின்னதம்பி இறந்துள்ளார் என நினைத்த போலீஸார், விபத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இருப்பினும், சின்னதம்பியின் தலையில் காயம் இருந்ததால் சந்தேகமடைந்த போலீஸார், இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சின்னதம்பியை, அவருடைய அண்ணன் பழனிசாமியே கொலை செய்தது தெரியவந்தது. அவரிடம் செய்த விசாரணையில், கொலை நடந்த அன்று பழனிசாமியும், சின்னதம்பியும் குடித்து விட்டு ஒரே வாகனத்தில் செல்லும்போது, தந்தை சித்தனின் வைத்தியத்துக்கு ஆன செலவு தொகையை தரவேண்டும் என பழனிசாமி கேட்டுள்ளார். அதற்கு சின்னதம்பி மறுக்கவே, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த பழனிசாமி, தம்பி சின்னதம்பியை கொலை செய்து விட்டு, விபத்தில் இறந்ததாக காரணம் காட்ட, ரோட்டின் ஓரத்தில் போட்டுச் சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. பழனிசாமியை, பூலாம்பட்டி போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


