Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/காப்பீடு கழக ஊழியர் சங்கத்தினர் பேரணி

காப்பீடு கழக ஊழியர் சங்கத்தினர் பேரணி

காப்பீடு கழக ஊழியர் சங்கத்தினர் பேரணி

காப்பீடு கழக ஊழியர் சங்கத்தினர் பேரணி

ADDED : ஆக 08, 2011 03:04 AM


Google News
சேலம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலத்தில் காப்பீடு கழக ஊழியர் சங்கத்தினர் பேரணி நடத்தினர்.சேலம் கோட்ட காப்பீடு கழக ஊழியர் சங்கத்தின், 21வது மாநாடு சேலம், குஜராத்தி கல்யாண மண்டபத்தில் நடந்தது.

முன்னதாக, இன்சூரன்ஸ் ஊழியர்களின் பொதுத்துறை பாதுகாப்பு பேரணி, தெய்வீகம் திருமண மண்டபத்திலிருந்து துவங்கி, மண்டபத்தில் நிறைவு பெற்றது. தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் சங்க உதவி பொருளாளர் கோபிநாத் பேரணியை துவக்கி வைத்தார். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க பொதுச் செயலாளர் வேணுகோபால் மாநாட்டை துவக்கி வைத்தார். தென் மண்டல பொதுச்செயலாளர் சுவாமிநாதன், இணைச்செயலாளர்கள் கிரிஜா, செந்தில்குமார் ஆகியோர் பேசினர். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பெட்ரோல், டீஸல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். லோக்சபாவிலும், சட்டசபையிலும் பெண்களுக்கு, 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். முறைசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்க வேண்டும். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை, உடனே வெளிக்கொண்டு வர வேண்டும். அணுசக்தி ஒப்பந்தங்களை கைவிட வேண்டும். தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும், ஊழல் புரிந்தவர்கள் மீது நடவடிக்கையை துரிதப்படுத்தாத மத்திய அரசை கண்டிப்பது. எல்.ஐ.சி.,யின் மூலதனத்தை, ஐந்து கோடியிலிருந்து 100 கோடி ரூபாயாக உயர்த்தும் மத்திய அரசின் முடிவை கைவிட வலியுறுத்துவது. பொதுத்துறை பொது காப்பீடு நிறுவனங்களை ஒன்றாக இணைக்க வேண்டும். 'டிவி' ஒளிபரப்பிலும் தணிக்கை முறையை கொண்டு வர வேண்டும். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களை தடுத்து, அவர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கோட்டத் தலைவர் கலியபெருமாள் தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் வெங்கடேசன், மாதேஸ்வரன், குமரேசன், உண்ணாமலை உள்பட சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட இன்ஷூரன்ஸ் ஊழியர்கள் பங்கேற்றனர். சங்க பொதுச் செயலாளர் தர்மலிங்கம் நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us