/உள்ளூர் செய்திகள்/சேலம்/கெங்கவல்லி பகுதியில் மர்மமான முறையில் இறந்து வரும் நாய்கள்கெங்கவல்லி பகுதியில் மர்மமான முறையில் இறந்து வரும் நாய்கள்
கெங்கவல்லி பகுதியில் மர்மமான முறையில் இறந்து வரும் நாய்கள்
கெங்கவல்லி பகுதியில் மர்மமான முறையில் இறந்து வரும் நாய்கள்
கெங்கவல்லி பகுதியில் மர்மமான முறையில் இறந்து வரும் நாய்கள்
ADDED : ஆக 08, 2011 03:04 AM
கெங்கவல்லி: கெங்கவல்லி பகுதி வீடுகளில் வளர்த்து வரும் நாய்கள், மர்மமான முறையில் இறந்து வரும் சம்பவம், அப்பகுதி மக்களை பீதியடையச் செய்துள்ளது.
கெங்கவல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், டவுசர் கொள்ளையர்கள், இரவு நேரங்களில் வீடுகளின் கதவை உடைத்து கொள்ளையடித்து வருகின்றனர். மேலும், இரவு நேரங்களில் உலா வருவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். அதனால், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். இந்நிலையில், வீடுகளில் வளர்த்து வரும் நாய்கள், கடந்த சில தினங்களாக மர்மமான முறையில் இறந்து வருகிறது. பரமசிவம் என்பவர் வளர்த்து வந்த நாய் ஒன்று, கொள்ளை சம்பவம் நடந்த இரண்டு தினங்களில் உயிரிழந்துள்ளது. மேலும், 13வது வார்டு பாரதிதாசன் பகுதியை சேர்ந்த சரளா என்பவர் வளர்த்து வந்த நாய், அரசு மருத்துவமனையில் இருந்த நாய், ஆறுமுகம் காலனியில் ஒரு நாய், 1வது வார்டு பகுதியில் இரண்டு நாய்கள் என, அடுத்தடுத்த தினங்களில், ஏழுக்கும் மேற்பட்ட நாய்கள் தொடர்ந்து உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இரவு நேரங்களில் கொள்ளையடிக்க வரும் டவுசர் கொள்ளையர்கள், நாய்களுக்கு பிஸ்கட்டில் விஷம் வைத்து கொன்றுவிடுவதாக, அப்பகுதி மக்கள் சந்தேகமடைந்துள்ளனர். ஏற்கனவே, டவுசர் கொள்ளையர்களால் பீதியடைந்துள்ள மக்கள், தொடர்ந்து நாய்கள் இறந்து வருவதால் மேலும் பீதியடைந்துள்ளனர்.


