Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/வாலிபரை தாக்கிய தம்பதியர் கைது

வாலிபரை தாக்கிய தம்பதியர் கைது

வாலிபரை தாக்கிய தம்பதியர் கைது

வாலிபரை தாக்கிய தம்பதியர் கைது

ADDED : ஆக 08, 2011 03:04 AM


Google News
வாழப்பாடி: வாழப்பாடி அருகே வாலிபரை தாக்கிய தம்பதியரை, போலீஸார் கைது செய்தனர்.

வாழப்பாடி அடுத்த பேளூர், ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி முருகன்(35). அவரது மனைவி காயத்ரிக்கும், அதே பகுதியை சேர்ந்த தனியார் பஸ் கண்டக்டர் கண்ணன்(30) என்ற வாலிபருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த காயத்ரி, தனது கணவர் முருகனுடன் சேர்ந்து கொண்டு, வாலிபர் கண்ணனை தாக்கியுள்ளனர். அதில் காயமடைந்த கண்ணன், சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து வாழப்பாடி போலீஸார் வழக்கு பதிவு செய்து, வாலிபரை தாக்கிய இளம்பெண் காயத்ரி மற்றும் அவரது கணவர் முருகன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். காயத்ரிக்கு ஒரு வயதில் கைக்குழந்தை உள்ளதால், அந்த குழந்தையுடன் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us