ADDED : ஆக 05, 2011 02:58 AM
சிவகிரி : வாசுதேவநல்லூரில் ஒன்றிய நாம் தமிழர் கட்சியின் சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலையம் முன் நடந்த கூட்டத்திற்கு வாசு., ஒன்றிய அமைப்பாளர் சீனிவாசன் தலைமை வகித்தார்.
சுடர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞர் பாசறை அமைப்பாளர் மதிவாணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மாவட்ட அமைப்பாளர்கள் செந்தில்குமார் (எ) கரிகாலன், வக்கீல் பீர்முகம்மது, சக்தி பிரபாகரன், மாநில மகளிரணி அமைப்பாளர் வெற்றிக்கொடி, மாநில பேச்சாளர்கள் புதுக்கோட்டை ஜெயசீலன், பேராவூரணி திலீபன் பேசினர்.வாசு., ஒன்றிய இளைஞர் பாசறை அமைப்பாளர் மலர்நிலவன் நன்றி கூறினார்.