Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/மில் அபகரிப்பு வழக்கில் 9 பேருக்கு முன்ஜாமின்

மில் அபகரிப்பு வழக்கில் 9 பேருக்கு முன்ஜாமின்

மில் அபகரிப்பு வழக்கில் 9 பேருக்கு முன்ஜாமின்

மில் அபகரிப்பு வழக்கில் 9 பேருக்கு முன்ஜாமின்

ADDED : ஆக 05, 2011 01:29 AM


Google News

சென்னை : சேலம் பிரிமியர் மில் அபகரிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேருக்கு, சென்னை ஐகோர்ட் முன்ஜாமின் வழங்கியது.

முன்னாள் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட மூன்று பேரை போலீஸ் காவலில் விசாரிக்க, ஐகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. சேலத்தில் உள்ள பிரிமியல் ரோலர் பிளவர் மில் அபகரிப்பு வழக்கில், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்ட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 30 கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இவ்வழக்கில் சீனிவாசன் உள்ளிட்ட 12 பேர் முன்ஜாமின் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்தனர். இம்மனுக்களை நீதிபதி ராஜசூர்யா விசாரித்தார். சீனிவாசன் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். சேலம் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் 10 நாட்களுக்குள் ஆஜராகி, முன்ஜாமின் பெற்றுக் கொள்ளலாம் என்றும், புலன்விசாரணைக்கு தேவைப்படும் போது போலீஸ் முன் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி, நிபந்தனை விதித்தார். முன்னாள் இன்ஸ்பெக்டர் லட்சுமணன், எஸ்.துரைசாமி, சி.துரைசாமி ஆகியோர், வரும் 9ம் தேதி சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் சரணடைய வேண்டும்; அவர்களை 11ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்கலாம்; 11ம் தேதி மாலை 5 மணிக்கு சேலம் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும்; அங்கு முன்ஜாமின் பெறலாம் என நீதிபதி ராஜசூர்யா உத்தரவிட்டுள்ளார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us