ADDED : ஆக 05, 2011 12:06 AM
ராமநாதபுரம்:கமுதி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் கிராம உதவியாளர்
பணிக்காலியிடங்களுக்கு, ராமநாதபுரம் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு
செய்தவர்களில் தகுதி, காலியிடம் உள்ள வருவாய் கிராமத்தைச்சேர்ந்த பதிவு
தாரர்கள் பதிவு மூப்பு அடிப்படையில் பரிந்துரைக்கப்பட உள்ளனர். ஐந்தாம்
வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது
01.07.2011 அன்று தாழ்த்தப்பட்ட வகுப்பினர் 35 வயது, மிகவும்
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்டோர் 32 வயது, பொது
போட்டியாளர் 30 வயது முடிவு பெற்றிருக்க கூடாது.
சீமானேந்தல்
(தாழ்த்தப்பட்ட வகுப்பினர், அருந்ததியினர்), வங்காருபுரம் (தாழ்த்தப்பட்ட
வகுப்பினர்), பெரியாணைக்குளம் (தாழ்த்தப்பட்ட வகுப்பினர்), சடையனேந்தல்,
சாம்பகுளம் (தாழ்த்தப்பட்ட வகுப்பினர்), பம்பனேந்தல் (மிகவும்
பிற்படுத்தப்பட்டோர்), திம்மநாதபுரம், கே.வேப்பங்குளம் (மிகவும்
பிற்படுத்தப்பட்டோர்), ஆனையூர் (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்), மாவிலங்கை
(பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்), பெருநாழி (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்),
வழுவனூர்(பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்), முதல்நாடு(பொது போட்டியாளர்),
நீராவி கரிசல்குளம், கள்ளிக்குளம்(பொது போட்டியாளர்) , எம்.புதக்குளம்
(பொது போட்டியாளர்) ஆகிய ஊர்களில் உள்ள பதிவுதாரர்கள் ராமநாதபுரம் மாவட்ட
வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு தகுதிச்சான்றுகளுடன் நேரில் வந்து, விபரம்
தெரிந்து கொள்ளலாம்.