Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/சிறுகடை வியாபாரிகள் திடீர் ஆக்கிரமிப்பு: தி.நகரில் பரபரப்பு

சிறுகடை வியாபாரிகள் திடீர் ஆக்கிரமிப்பு: தி.நகரில் பரபரப்பு

சிறுகடை வியாபாரிகள் திடீர் ஆக்கிரமிப்பு: தி.நகரில் பரபரப்பு

சிறுகடை வியாபாரிகள் திடீர் ஆக்கிரமிப்பு: தி.நகரில் பரபரப்பு

ADDED : ஆக 03, 2011 01:17 AM


Google News

சென்னை : நடைபாதை சிறு வியாபாரிகள், தி.நகர் உஸ்மான் சாலை பிளாட்பாரங்களை, திடீரென ஆக்கிரமித்து கடை நடத்த முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.சென்னை உஸ்மான் ரோடு பிளாட்பார பகுதியில், 131 நடைபாதை சிறு கடை வியாபாரிகளும், உஸ்மான் ரோடு மேம்பாலம் கீழ் பகுதியில், 79 நடைபாதை சிறு வியாபாரிகளும் கடை நடத்தி வந்தனர்.

ஐகோர்ட் உத்தரவுபடி, சிறுகடை வியாபாரிகளுக்கு இடஒதுக்கீடு செய்ய வேண்டும் என, சென்னை மாநகராட்சி அடையாள அட்டை வழங்கி, வாடகையும் வசூலித்து வந்தது. இந்நிலையில், இக்கடைகாரர்களுக்கு மாநகராட்சி உஸ்மான் ரோட்டில், தனி வளாகம் கட்டியுள்ளது. சிறுகடை வியாபாரிகள், 628 பேருக்கும், ÷ஷாரூம் வியாபாரிகள், 14 பேருக்கும் இடமளித்துள்ளது.



இந்த 14 பேரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தின் அளவு போ தாது, அதிகரித்து வழங்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர். இதனால், புதிய வளாகம் திறக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், தங்களுக்கு இதுவரை மாற்றிடம் வழங்காததால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், புதிய வளாகம் திறக்கும் வரை, தங்களுக்கு உஸ்மான் ரோடு மேம்பாலம் கீழே, தற்காலிக இடமளிக்க வேண்டும் என வலியுறுத்தி, சென்னை மாநகர் சிறு வியாபாரி சங்கங்களின் கூட்டமைப்பினர் நேற்று உஸ்மான் சாலை பிளாட்பார பகுதிகளை, திடீரென ஆக்கிரமித்து கடை நடத்த முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் வந்து அவர்களிடம் சமாதானம் பேசி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.



இதுகுறித்து, சென்னை மாநகர் சிறு வியாபாரி சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலர் கருணாநிதி கூறியதாவது: சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுபடி, சிறுகடை வியாபாரிகளுக்கு இடஒதுக்கீடு தர வலியுறுத்தி, மாநகராட்சி அதிகாரிகள் சிறு வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கி, வாடகையும் வசூலித்து வருகின்றனர். தி.நகர் உஸ்மான் ரோட்டில் உள்ள, 131 வியாபாரிகளுக்கு சென்னை மாநகராட்சி அடையாள அட்டை வழங்கி, வாடகையும் வசூலித்து வந்தது. இந்நிலையில் கடைகள் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கிறது என்று கூறி மாநகராட்சி அப்புறப்படுத்தியது. இது சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு உள்ளது. எங்களுக்கு கடை நடத்த இடம் ஒதுக்கி தர வேண்டும் என்று கடந்த 21ம் தேதி போராட்டம் நடத்தினோம். இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் வந்து பேச்சு நடத்தினார். இரு நாளில் நடவடிக்கை எடுப்பதாகச் சொன்னார்கள். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 70 நாட்களாக கடை நடத்தாமல், திண்டாடிக் கொண்டிருக்கிறோம். எங்கள் குடும்பங்களின் அன்றாட வாழ்க்கைக்கு கூட வருவாய் இன்றி பசி, பட்டினியால் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us