Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/வீட்டின் பூட்டை உடைத்துநகை, பணம் கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்துநகை, பணம் கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்துநகை, பணம் கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்துநகை, பணம் கொள்ளை

ADDED : ஆக 03, 2011 01:08 AM


Google News
ஓசூர்: ஓசூரில் பூட்டிய வீட்டை உடைத்து எட்டு பவுன் நகை, 20,000 ரூபாய் ரொக்க பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

ஓசூர் தளி ஹட்கோவை சேர்ந்தவர் முகமது தனியுல்லா. இவரது மனைவி சரிதா (38). தனியுல்லா சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை பணிபுரிந்து வருகிறார். சரிதா சொந்தமாக கர்நாடகா மாநிலம் அத்திப்பள்ளியில் எக்ஸ் போர்ட் கம்பெனி நடத்துகிறார்.நேற்று முன்தினம் சரிதா, சர்ஜாபுரத்தில் உள்ள தனது அண்ணன் வீட்டிற்கு சென்றார். நேற்று வீட்டிற்கு திரும்பிய போது, வீட்டின் பின்புறம் கதவு உடைக்கப்பட்டிருந்தது.அதிர்ச்சி அடைந்த சரிதா வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்து எட்டு பவுன் நகை, 20,000 ரூபாய் ரொக்க பணம், டி.வி.டி., உள்ளிட்ட பல்வேறு பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. ஓசூர் டவுன் போலீஸார் விசாரித்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us