பத்மநாப சுவாமி கோவில் அருகே தீ விபத்து: திட்டமிட்ட சதிச்செயல்
பத்மநாப சுவாமி கோவில் அருகே தீ விபத்து: திட்டமிட்ட சதிச்செயல்
பத்மநாப சுவாமி கோவில் அருகே தீ விபத்து: திட்டமிட்ட சதிச்செயல்
கொச்சி : திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறைகளில், ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள பொக்கிஷங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின், கோவிலுக்கு, மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, 24 மணி நேர கண்காணிப்பு நடந்து வருகிறது.
கலெக்டர் பி.எம்.பிரான்சிஸ் விசாரணை நடத்தி, அரசுக்கு அனுப்பிய அறிக்கையில்,'தீ விபத்து ஏற்பட ஷார்ட் சர்க்கியூட் காரணமல்ல. சம்பவம் நடந்த இடத்தில் மூன்று கேஸ் சிலிண்டர்கள் இருந்ததில், ஒன்று தான் வெடித்துச் சிதறியுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசாருக்கு இது திட்டமிட்ட சதிச்செயல் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சம்பவ இடத்தில் இருந்து தடய அறிவியல் நிபுணர்கள், 22 மாதிரிகளை எடுத்துச் சென்று, ஆய்வு நடத்தி வருகின்றனர். விசாரணை நடத்திய பலரும், மின்சாரக் கசிவு காரணமாக விபத்து ஏற்படவில்லை என தெரிவித்துள்ள நிலையில், திட்டமிட்ட சதிச்செயல் தான் என எண்ண வைத்துள்ளது' என, கலெக்டர் குறிப்பிட்டுள்ளார்.


