புதுச்சேரரி : ரெயின்போ நகர் தூய ஜான்மரி வியான்னி ஆலய ஆண்டு விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.புதுச்சேரி அருளாளர் அன்னை தெரசா மேனிலைப் பள்ளி முதல்வர் அருட்திரு பால்ராஜ்குமார் திருப்பலி நிறைவேற்றி கொடியேற்றத்தைத் துவக்கி வைத்தார்.வரும் 4ம் தேதி மாலை 6 மணிக்கு புதுச்சேரி கடலூர் பேராயர் ஆனந்தராயர் ஆண்டகை தலைமையில் சிறுதேர்பவனியும், ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடக்கிறது.