/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/தேசிய திறனாய்வு தேர்வு பள்ளி மாணவி சாதனைதேசிய திறனாய்வு தேர்வு பள்ளி மாணவி சாதனை
தேசிய திறனாய்வு தேர்வு பள்ளி மாணவி சாதனை
தேசிய திறனாய்வு தேர்வு பள்ளி மாணவி சாதனை
தேசிய திறனாய்வு தேர்வு பள்ளி மாணவி சாதனை
ADDED : ஜூலை 31, 2011 01:01 AM
சாத்தான்குளம் : தேசிய திறனாய்வு தேர்வில் ஞானியார் குடியிருப்பு ஊராட்சி
ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி சாதனை படைத்துள்ளார்.சாத்தான்குளம் அருகே உள்ள
ஞானியார்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு
2010- 11 ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவி சரண்யா தேசிய திறனாய்வுத்தேர்வில்
சாதனை படைத்துள்ளார்.
வெற்றி பெற்ற மாணவியை சாத்தான்குளம் உதவி
தொடக்கக்கல்வி அலுவலர் மீனாட்சி, வட்டார வளமைய மேற்பார்வையாளர்
ஹெத்சம்தாஸ், பள்ளி தலைமை ஆசிரியர் சமதானம் பீற்றர், பள்ளி ஆசிரியர்கள்
புதுக்குளம் பஞ்., தலைவர் பால்ராஜ், கிராமக்கல்விக்குழு உறுப்பினர்கள்
மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் பாராட்டினர்.


