இந்த ஆண்டில் சமச்சீர் கல்வி அமலாவதுசாத்தியம் இல்லை:அரசு வழக்கறிஞர்
இந்த ஆண்டில் சமச்சீர் கல்வி அமலாவதுசாத்தியம் இல்லை:அரசு வழக்கறிஞர்
இந்த ஆண்டில் சமச்சீர் கல்வி அமலாவதுசாத்தியம் இல்லை:அரசு வழக்கறிஞர்

இந்நிலையில், இந்த மனு மீது, நேற்றும் விசாரணை நடந்தது. ஜே.எம்.பன்சால், தீபக் வர்மா, பி.எஸ்.சவுகான் ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன், தமிழக அரசு சார்பில் ஆஜரான, சீனியர் வழக்கறிஞர் பி.பி.ராவ், தனது வாதத்தில் கூறுகையில், ''சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைப்பதற்காக, சட்டத் திருத்தம் கொண்டு வந்தது, நியாயமான நடவடிக்கை தான். சமச்சீர் கல்வித் திட்டம், காலவரையற்று ஒத்தி வைக்கவில்லை. தற்காலிகமாகவே ஒத்தி வைக்கப்பட்டுள்ளது'' என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ''சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, கால வரையறை எதுவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதா'' என, கேள்வி எழுப்பினர்.
சமச்சீர் கல்வித் திட்டத்தின் பணிகள், பாடத் திட்டங்கள் மற்றும் பாடப் புத்தகங்களை தயாரிப்பதுடன் இல்லாமல், தகுதியான ஆசிரியர்களை நியமிப்பது, கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது, தேர்வுகளை நடத்துவது, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான நடத்தை விதிமுறைகளை உருவாக்குவது ஆகியவற்றையும் சார்ந்திருக்கிறது.
எனவே, சமச்சீர் கல்வித் திட்டத்தை, இந்தாண்டில் நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை. சமச்சீர் கல்வி திட்டத்தில், தற்போதுள்ள குறைபாடுகளை சீரமைக்க அவகாசம் தேவை. சீரமைக்கப்பட்ட பின், ஒரு ஆண்டுக்குள் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நிபுணர் குழு ஆய்வு செய்தபின், இத்திட்டம், படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும்.இவ்வாறு தமிழக அரசு வழக்கறிஞர் வாதாடினார். சமச்சீர் கல்வி திட்டத்தின் வாதம், இன்று தொடரவுள்ளது.