Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மக்கள் படையெடுப்பு : தேய்கிறது விவசாய வேலைகள்

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மக்கள் படையெடுப்பு : தேய்கிறது விவசாய வேலைகள்

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மக்கள் படையெடுப்பு : தேய்கிறது விவசாய வேலைகள்

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மக்கள் படையெடுப்பு : தேய்கிறது விவசாய வேலைகள்

ADDED : ஜூலை 26, 2011 01:11 AM


Google News

புதியம்புத்தூர் : வேலைப்பளு குறைவாக இருப்பதால் கிராமப்பகுதிகளிலுள்ள கூலியாட்கள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிகளுக்கு சென்று விடுவதால் அழிந்து வரும் விவசாயத்தை தூக்கி நிறுத்த தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ற விவசாய பணிகளை செய்தால் விவசாயம் பெருக வாய்ப்பு உள்ளது.மத்திய அரசு கிராமப்புற மக்களின்வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக ஆண்டிற்கு 100 நாட்களுக்கு குறையாமல் வேலை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இத்திட்டத்திற்கு கிராம மக்களிடம் மிகுந்த வரவேற்பு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் காலை 9 மணியிலிருந்து 11 மணி வரை, 2 மணி நேரம் நடக்கும் இப்பணியில் செய்ய வேண்டிய பணியில் 25 சதவீதம் பணி கூட செய்வதில்லை. 12 சதுர அடி நீள அகலமும் 1/2 அடி ஆழமும் மண் எடுக்க வேண்டும் என்பது விதி. 12 சதுரஅடி நீள அகலம் மட்டும் தோண்டும் இப்பணியாட்கள் 1/2 அடி ஆழத்திற்கு பதிலாக 2 இஞ்ச் ஆழம் கூட தோண்டுவது கிடையாது.



2 மணி நேரம் அரைகுறையாக வேலையை பார்த்து விட்டு மதியம் 3.30 மணி வரை மரநிழலில் படுத்து உறங்குவதுதான் வேலை. எனவே இப்பணிக்கு 75 வயதானவர்களும், நடக்க முடியாதவர்களும் விருப்பத்துடன் செல்கின்றனர். இதனால் விவசாயிகள் கடும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதனால் விளைச்சல் குறைகிறது. விளைச்சல் குறைவதால் விலைவாசி உயர்வு ஏற்படுகிறது. தற்சமயம் செய்து வரும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தால் பெரிய அளவில் பிரயோஜனம் ஏற்படப்போவதில்லை. எனவே இத்திட்ட பணியாட்களை அந்தந்த பஞ்.,களிலுள்ள விவசாயிகளுக்கு விவசாய பணிகளுக்கு அனுப்பி வேலை வாங்கினால் இத்திட்ட பணியாளர்களுக்கு பணி கிடைத்த மாதிரியும் ஆகிவிடுகிறது. விவசாயிகளுக்கும் விவசாய பணிகள் செலவில்லாமல் முடிக்கப்பட்டுவிடுகிறது. சின்ன பஞ்.,களில் கூட 200 நபர்களுக்கு குறையாமல் வேலை செய்து வருகின்றனர்.



விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு வரிசை அடிப்படையில் ஒரு விவசாயிக்கு 10 கூலியாட்களை அனுப்பினால் நாள் ஒன்றுக்கு 20 விவசாயி பயனடைவர். விவசாயி 10 கூலியாட்களிடமும் சரியானபடி வேலை வாங்கி விடுவார். விவசாயி ஒப்புதல் கடிதத்தை வைத்து கூலியாட்களுக்கு சம்பளம் தரப்பட வேண்டும். இவ்வாறு செய்தால் ஒரே கல்லில் இரண்டு மாங்காயை பறித்த மாதிரி ஆகிவிடுகிறது. அருகிலுள்ள கேரள மாநிலத்திலும் இத்திட்ட பணிகளுக்கு விவசாய பணிகளைத்தான் செய்து வருகின்றனர். இதுபோல் தமிழக அரசும் செய்தால் விவசாயம் பெருகும். விலைவாசி குறையும். அரசு இதை உடனடியாக செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us