ADDED : ஜூலை 21, 2011 09:12 AM
புதுடில்லி : பிரஹார் என்ற ராணுவ ஏவுகணையை இந்திய ராணுவம் இன்று வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
ஒரிசா மாநிலம் சண்டிபூரில் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. 150கி.மீ., சுற்றளவிலான இலக்கை தாக்கி அழிக்கக் கூடிய ஆற்றல் கொண்டது பிரஹார் ஏவுகணையாகும். ராக்கெட்டுகளின் உதவி இல்லாமல் இந்த ஏவுகணையை இயக்க முடியும் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.