ADDED : ஜூலை 20, 2011 10:08 AM
மாமல்லபுரம்: கிழக்கு கடற்கரை சாலையில், டிரைவரை தாக்கி காரை கடத்திச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரியிலுள்ள தனியார் ஓட்டலை இன்று அதிகாலை 2 மணியளவில் அணுகிய 25 வயது மதிக்கத்தக்க இரண்டு பேர், சென்னை செல்ல கார் தேவை என கேட்டுள்ளனர். இதையடுத்து, புதுச்சேரி குயவர்பாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்ற டிரைவர் அவர்களை காரில் (PY01 AL 6521) சென்னை அழைத்துச் சென்றுள்ளார். இன்று அதிகாலை 4.15 மணியளவில் கல்பாக்கம் அருகே கூவத்தூர் என்ற இடமருகே வந்தபோது, காரில் இருந்த இருவரும் கத்தியால் டிரைவரை தாக்கி காரை கடத்திச்சென்றனர். இதுகுறித்து கூவத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.