ADDED : ஜூலை 19, 2011 12:29 AM
செஞ்சி : சமையல் செய்த போது தீக்காயமடைந்த இளம்பெண் இறந்தார்.
செஞ்சி அடுத்த கீழ்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த காளி மகள் தனலட்சுமி, 26. இவர், கடந்த 13ம் தேதி காலை வீட்டில் ஸ்டவ் பற்ற வைத்து டீ போட்டார். அப்போது அவரது உடையில் தீப்பிடித்ததில் பலத்த காயமடைந்தார். செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவர், கடந்த 16ம் தேதி இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது குறித்து செஞ்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.