Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மாநில தலைவர் நியமிக்க காங்., கோரிக்கை

மாநில தலைவர் நியமிக்க காங்., கோரிக்கை

மாநில தலைவர் நியமிக்க காங்., கோரிக்கை

மாநில தலைவர் நியமிக்க காங்., கோரிக்கை

ADDED : ஜூலை 17, 2011 01:19 AM


Google News

திருப்பூர் : தங்கபாலு விலகியதால், அடுத்த தலைவரை நியமிக்க காங்., தலைவரிடம் வலியுறுத்துவது என, கலந்தாய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.மாநகர காங்கிரஸ் வார்டு தலைவர்களின் கலந்தாய்வு கூட்டம், திருப்பூரில் நடந்தது; கமிட்டி தலைவர் சுந்தரராஜன் தலைமை வகித்தார்.

பொது செயலாளர் ஜெயா, கவுன்சிலர் ராதாமணி முன்னிலை வகித்தனர்.நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:மாநகர, மாவட்டத் தலைவரை காங்., கமிட்டி பொது செயலாளர் மற்றும் தமிழக பொறுப்பாளர் மட்டுமே நியமிக்க முடியும்; அதை மட்டுமே ஏற்று கொள்ள முடியும்; மற்ற நியமனங்கள் செல்லாது. மாநகராட்சி 60 வார்டுகள் முறையாக விரிவுபடுத்தப்படவில்லை; 39 மற்றும் 40வது வார்டுகள் இணைத்து 31 வது வார்டு உருவாக்கப்பட்டுள் ளது. மக்கள் தொகை அதிகமாக இருப்பதால், கவுன் சிலர் பணியை சரிவர செய்ய இயலாது. எனவே மறுபரிசீலனைக்கு இடமளிக்க வேண்டும்.உள்ளாட்சி தேர்தலில் அனைத்து வார்டுகளில் போட்டியிடுவது; விரைவில் தமிழகத்துக்கு காங்., மாநில தலைவரை நியமிக்க, காங்., தலைவர் சோனியாவிடம் கோரிக்கை வைப்பது; 150 நாட்களாக மூடிக்கிடக்கும் சாய ஆலைகளை திறக்க வலியுறுத்தி, கட்சி சார்பில் உண்ணாவிரதம் இருப்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இளைஞர் காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன், தெற்கு வட்டார தலைவர் வெள்ளியங்கிரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us