ADDED : ஜூலை 14, 2011 11:46 PM
தர்மபுரி: தர்மபுரி நகராட்சியில், ஓட்டுச் சாவடி அமைப்பது குறித்து ஆய்வு நடந்தது.
உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்த பணிகள் நடந்து வருகிறது. நகராட்சியில் வார்டுகள் சீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், ஆண், பெண் ஓட்டு சாவடிகள் அமைக்கும் இடங்களை, நகராட்சி கமிஷனர் அண்ணாதுரை ஆய்வு செய்தார். இன்ஜினியர் ஜெகதீஸ்வரி, உதவி இன்ஜினியர் செந்தில்குமார், நகரமைப்பு அலுவலர் பிரபாகரன், எழுத்தர் மாதையன் ஆகியோர் உடன் இருந்தனர்.